Skip to content
Home » பாஜகவினர் வைத்த பட்டாசு… பற்றி எரிந்த குடிசைகள்… நழுவிய கட்சியனர்… அதிர்ச்சி…

பாஜகவினர் வைத்த பட்டாசு… பற்றி எரிந்த குடிசைகள்… நழுவிய கட்சியனர்… அதிர்ச்சி…

  • by Senthil

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று நாகப்பட்டினம்-நாகூர் பிரதான சாலையில் அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். இதன் ஒரு பகுதியாக காடம்பாடி என்ற பகுதியில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

அண்ணாமலையுடன் எஸ்.ஜி.எம்.ரமேஷ்

அப்போது வேட்பாளரை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பக்கிரிசாமி என்பவரது குடிசை வீட்டின் கூரை மீது விழுந்தது. இதில் மளமளவென தீ பரவி வீட்டின் கூரை முழுவதும் பற்றி எரிந்தது. மேலும் அருகாமையில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கூரையின் மீதும் தீப்பிடித்து எறிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே தீ விபத்து ஏற்பட்டதை கண்டும் காணாமல் பாஜகவினர் அங்கிருந்து நழுவிச் சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்த சம்பவம் குறித்து, நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாஜக வேட்பாளரை வரவேற்க வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக இரண்டு குடிசை வீடுகள் எரிந்து நாசமாக உள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!