நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று நாகப்பட்டினம்-நாகூர் பிரதான சாலையில் அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். இதன் ஒரு பகுதியாக காடம்பாடி என்ற பகுதியில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே தீ விபத்து ஏற்பட்டதை கண்டும் காணாமல் பாஜகவினர் அங்கிருந்து நழுவிச் சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்த சம்பவம் குறித்து, நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாஜக வேட்பாளரை வரவேற்க வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக இரண்டு குடிசை வீடுகள் எரிந்து நாசமாக உள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியது.