Skip to content
Home » காங். வேட்பு மனு தள்ளுபடி………சூரத் தொகுதியில் பாஜக போட்டியின்றி தேர்வு

காங். வேட்பு மனு தள்ளுபடி………சூரத் தொகுதியில் பாஜக போட்டியின்றி தேர்வு

  • by Senthil

குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்பு மனு தாக்கல் செய்தார். பரிசீலனையின்போது நிலேஷ் கும்பானியின் பெயரை முன்மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டவர்கள் வேட்புமனுவில் உள்ள கையொப்பம் தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். அதே போல் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் மனுவை முன்மொழிந்தவர்களும் அது தங்களின் கையெழுத்து இல்லை என கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினார். இதில், நிலேஷ் கும்பானி, மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலா ஆகியோரிடம் விளக்கங்களை கேட்டார். அவர்கள் பதிலளிப்பதற்கு நேற்று காலை அவகாசம் கொடுத்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ். மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி நேற்று தெரிவித்தார். இதனால், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே இன்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் சுயேச்சைகள் அனைவரும் வாபஸ் பெற்றனர். எனவே  இங்கு பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வேட்பு மனு மட்டுமே எஞ்சியிருந்தது. எனவே அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  தேர்தல் நடக்கும் முன்னரே  பாஜகவுக்கு முதல் வெற்றி செய்தி கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!