சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி காணாமல் போன கர்ப்பிணி கோகிலா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகிலா காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, சுமார் 2 வாரங்களுக்குப் பிறகு கோகிலாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
