Skip to content
Home » திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

திருச்சி ஜிஎச்-ல் அடையாளம் தெரியாத ஆண் சடலம்….

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொலைத்தொடர்பு அலுவலகம் பின்புறத்தில் சுமார் (65) வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த துப்புரவு பணியாளர் இதனை பார்த்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனை இருக்கை அதிகாரி ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு டாக்டர்கள் அந்த முதியவரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை அவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை போலீசருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!