திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அதை இன்று வெடிக்கும் என மின்னஞ்சல் வந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போலீசாருக்கும் வெடிகுண்டு

கண்டறியும் நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஆட்சியர் அலுவலகம் சென்ற வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர்.
குறிப்பாக மாவட்ட ஆட்சியரின் அறை துணை ஆட்சியர் வரை டி ஆர் ஓ , வருவாய் அலுவலர்

அறை என பல்வேறு அறைகளிலும் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
