Skip to content
Home » திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் சேவை பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் இந்த ரெயிலை பயன்படுத்த பயணிகள் பலரும் ஆர்வம் காட்ட தொடங்கினர். அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி சென்னை – மைசூரு இடையில் 5-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. தற்போது 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் 20 ஆயிரம் பேர் வரையில் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர். பிரதமர் மோடி வருகை இந்த நிலையில், தமிழகத்திற்குள் வந்தே பாரத் ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டின் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையானது சென்னை-கோவை இடையே தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்ரல் 8-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து, தாம்பரம் – செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரெயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த 3 திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.294 கோடி ஆகும். சென்னை-கோவை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் சேவையானது தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும். தமிழகத்திற்கு கிடைக்கப்பெற்ற 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!