சென்னையிலிருந்து தேனி மாவட்டம் கம்பம் நோக்கி 34 நபர்களுடன் ஒர தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் திருச்சி பால்பண்ணை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சுக்கு முன்னே தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் பாரத்துடன் ஒரு லாரி சென்றது. எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ், லாரியின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் முன்பகுதியில் இருந்த ஒரு மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் லாரி் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தல் பஸ்சின் முன் பகுதியில் இருந்த சில பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.