Skip to content
Home » அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே  கடுமையான போட்டி ஏற்பட்டது.

தஞ்சை தொம்பன் குடிசை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று பயணிகளை இறக்கி விட்டது. அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்துஓட்டுநர் அரசு பேருந்தை வழி மறித்து நிறுத்தி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி வந்து அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்தார். ஏன்  எனக்கு உரிய நேரத்தில் பஸ்சை ஓட்டுகிறீர்கள் என கேட்டார். இதனால் வாக்குவாதம் முற்றியது.

சண்டையை சமாதானம் படுத்திய அரசு பேருந்து நடத்துநரை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் விரட்டி சென்று நடுரோட்டில் சரமாரியாக தாக்கினர். இதனால் இரு பேருந்திலும் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் அரசுப் பேருந்து நடத்துநரை நடு ரோட்டில் கீழே தள்ளி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!