Skip to content
Home » புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த இணைகளுக்கு திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில் இன்று (11.09.2023) நடைபெற்றது.

உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திருமதி.அனிதா, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திருமதி.திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் திரு.எம்.லியாகத் அலி, நகர்மன்ற உறுப்பினர் திரு.ரமேஷ்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதுக்கோட்டை மாவட்டம் முதல்வரின் முகவரித்துறை மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர்  சிறப்பு குறைதீர்க்கும் நாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (11.09.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா,   மாற்றுத்திறனாளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  எஸ்.உலகநாதன் உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!