புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (23.09.2023) துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித்
தலைவர் மு.ராசி முருகானந்தம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.