Skip to content
Home » மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டருக்கு விருது…

மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டருக்கு விருது…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதுகளை கரூர்

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் , திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ,தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,அரசுத் துறை செயலாளர்கள் உடன் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!