Skip to content
Home » மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

மன்னார்குடி அருகே மேலவாசல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வீரப்பன். இவரது மகன் கோவிந்தராஜ் (28),  வேளாண்துறையில் பணியாற்றுகிறார். இவருக்கும்  காளாஞ்சி மேடு மகாலிங்கம் மகள் கிருத்திகா (23) என்பவருக்கும்  மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்காக வீரப்பன், மேலவாசலில் வாடகைக்கு வீடு எடுத்து, புதுமண தம்பதியை தங்க வைத்தார். இந்த நிலையில் நேற்று   மதியம் வாடகை வீட்டை பூட்டி விட்டு,  மணமக்கள் கோவிந்தராஜனும், கிருத்திகாவும் அருகில் உள்ள சொந்த வீட்டுக்கு சாப்பிட சென்றனர். தொடர்ந்து அங்கேயே பேசிக் கொண்டு இருந்துவிட்டு,

நேற்று மாலை மீண்டும் வாடகை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜும், கிருத்திகாவும் வீரப்பனுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து மன்னார்குடி போலீசார் நிகழ்விடத்துக்கு சென்று சோதனையிட்ட நிலையில், வீட்டில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.ஐந்து லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!