Skip to content
Home » சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், அங்கு வேலை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பி இங்குள்ள வேலைகளை செய்து வந்த நிலையில் தன்னை செங்கோட்டை நகர பாஜ பொதுச் செயலாளர் பாலா என்ற பாலகிருஷ்ணன் (40) அணுகி, நீ போலீஸ் போன்ற தோற்றத்தில் உள்ளாய், தற்போது தமிழக சிபிசிஐடி காவல்துறையில் புதிதாக நுண்ணறிவு உளவு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது, அதற்கு ஆள் சேர்ப்பு பணி நடக்கிறது, எனக்கு சில ஐபிஎஸ் அதிகாரிகள் நெருக்கமானவர்கள், அவர்கள் மூலம் அந்த பணியில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறி ரூ.40 லட்சம் பெற்றார். தொடர்ந்து, ஒரு வாரத்தில் தன்னை அழைத்து சிபிசிஐடி உளவுப் பிரிவில் சார்பு ஆய்வாளராக நியமித்துள்ளதாக ஒரு பணி நியமன ஆணை வழங்கினார். அது போலி பணி நியமன ஆணை என்பது பின்னர் தெரியவந்தது. மறுபடியும் அவரிடம் அதுபற்றி கேட்டபோது என்னை மிரட்டும் தொணியில் பேசினார். தொடர்ந்து, நான் என் குடும்பத்துடன் சென்று என் பணத்தை கேட்ட போது பணமும் தர முடியாது, வேலையும் வாங்கித் தர முடியாது எனக்கூறி மிரட்டினார் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து எஸ்பி சாம்சன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!