Skip to content
Home » 39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை)  காலை 10 .30 மணிக்கு தொடங்குகிறது.  இந்த தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகிறார்கள்.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிகமுன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி  இருந்தது. அதற்கு பின்னர்  வந்தவர்களுக்கு அனுமதி  மறுக்கப்படும்.  ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால், இந்த ஆண்டு  சற்று முன்னதாக  தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடஙங்கி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு முன்பே வர வேண்டும். தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும். அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!