Skip to content
Home » செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

  • by Senthil

செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பேருந்து இயக்கும் பொழுது செல்போன் பயன்படுத்திய ஓட்டுனர் மீது ஒழுங்கு நடவடிக்கை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் to மதுரை வழித்தடத்தில் பேருந்து இயக்கிய ஓட்டுனர் மோகன் ஒரு கையில் செல்போன் பயன்படுத்தி பேசியவாறு ஒரு கையில் பேருந்தை இயக்கிய வீடியோ மற்றும் புகைப்படம் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி வரப்பெற்றது.

இதையடுடுத்து ஓட்டுனர் பணியின்போது செல்போன் பயன்படுத்தி பேருந்தை இயக்கிய குற்றத்திற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பொது மேலாளர் (காரைக்குடி) அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் யாரேனும் செல்போன் பயன்படுத்தி பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!