Skip to content
Home » தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Senthil

தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உஷா (60). கடந்த 10ம் தேதி இரவு தனது கணவருடன் உஷா பைக்கில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பைக்கில் நின்ற மர்மநபர்கள் 2 பேர் சட்டென்று உஷா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம்.

இதுகுறித்து உஷா  தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!