சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.
சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.