Skip to content
Home » சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Senthil

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மிக்ஜம்’ புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி.கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.  இதனை தொடர்ந்து மிக்ஜம் புயலால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார். மேலும் சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம்  கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!