Skip to content
Home » தக்காளி விலை மீண்டும் உயர்வு…

தக்காளி விலை மீண்டும் உயர்வு…

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.150 வரையிலும், வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரையிலும் விற்கப்பட்டது. இடையில் கடந்த சில நாட்களாக ஓரளவு விலை குறைந்து, கடந்த 24-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதன் பின்னர், மீண்டும் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில் கடந்த 25-ந்தேதி கிலோவுக்கு ரூ.10-ம், 26ந் தேதி கிலோவுக்கு ரூ.20-ம் உயர்ந்து  நேற்றைய தினம் தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் தக்காளி விலை ஏற்றம் கண்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்து, மொத்த விற்பனையில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரகம் தக்காளி கிலோ ரூ. 150க்கும், இரண்டாம் ரகம் ரூ.140க்கும், 3ம் ரகம் ரூ.130க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி விலை மேலும் உயர்ந்து விற்பனையாவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!