சென்னை மயிலாப்பூரை சேர்ந்த உதயசங்கர் என்ற இளைஞர், ரஷ்யாவை சேர்ந்த மரியா என்ற பெண்ணை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். சீனாவில் உள்ள ஒரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியபோது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. தமிழ் கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தனது பெயரை ‘கீர்த்தனா’ என மாற்றிக்கொண்ட ரஷ்யப் பெண் மரியாவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
