Skip to content
Home » சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரக்கற்கள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு, கடந்த 7-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தனிப்படை பிரிவினர், 7-ம் தேதி இரவில் இருந்தே, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முகாமிட்டு ரகசியமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.

வைரம் கடத்தல்
வைரம் கடத்தல்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு செல்லும், தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தயாரானது.

அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த, சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக, தாய்லாந்து நாட்டிற்குச் செல்ல வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவர் வைத்திருந்த கைப்பையைத் திறந்து சோதனையிட்டனர். அந்தக் கைப்பைக்குள் இருந்த பார்சல்களில், புத்தம் புதிய வைரக் கற்கள் மின்னிக் கொண்டு இருந்தன. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், அந்த பயணியின் விமான பயணத்தை, ரத்து செய்தனர்.

அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதித்தனர். அவருடைய கைப்பை மற்றும் அவர் அணிந்திருந்த உள்ளாடைகள் ஆகியவற்றுக்குள், விலை உயர்ந்த, உயர்ரக வைரக்கற்கள் பெரும் அளவு பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!