Skip to content
Home » பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி பகுதியில் உள்ள ஹர்ட் எனும் தன்னார்வ அமைப்பில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நூறு குழந்தைகளை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரண்மனை, பெருவுடையார் திருக்கோவில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு நாள் பயணமாக சுற்றுலா துறையின் சார்பில் இன்று அழைத்துச் சென்றார்கள். இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பொறுப்பு ஆசிரியர்களிடமும், சுற்றுலாத்துறை

அலுவலர்களிடமும், வாகன ஓட்டுனர்களிடமும் குழந்தைகளை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாகனங்களை பாதுகாப்பாக அதிவேகமில்லாமல் இயக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் தளங்களில் உள்ள வரலாற்று சிறப்பு அம்சங்களை குழந்தைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நிகழ்வின்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கான சுற்றுலா அலுவலர் (பொ) ஜெகதீஸ்வரி, ஹார்ட் அமைப்பின் தலைவர் ராஜாவெங்கடேஷ் மற்றும் பலர் உடனிருந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!