Skip to content
Home » குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Senthil

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை சிலர் திட்டமிட்டு இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர் தவிர பொய்யான செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர்.

தவறான செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இரண்டு விதமான பொய் செய்தி பரப்பியதாக 2நபர்கள் மீது திருச்சி மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்புவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

பொதுமக்கள் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எவ்வித தவறான முடிவும் எடுக்ககூடாது.

திருச்சி மாவட்டம், துறையூரில் நடந்த இரட்டை கொலை, கொள்ளிடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஆகியவை குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலை செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் 82வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!