Skip to content
Home » பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

ஸ்ரீரங்கம் தாலுக்கா திருவானைக்காவல் அருகே மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் 38 வயதான பரணிதரன்.இவருடைய மனைவி திவ்யா வயது(32) இவர்களுக்கு மோனி ரித்திகா(16) என்ற மகளும், நிசான் (10) என்ற மகளும் உள்ளனர். பரணிதரன் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில ஒரு தனியார் தங்கும் விடுதியில் வரவேற்புரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருடைய மனைவி காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகளுடன் பரணிதரன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இன்னோவா காரில் வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் அறிவாள்களுடன் இறங்கி வீட்டுக்குள் புகுந்தனர்.அங்கு வீட்டில் இருந்த பரணிதரனை சரமாரியாக அறிவாளால்

வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பி்யோடினர். இதில் படுகாயம் அடைந்த பரணிதரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம், திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லீலி மற்றும் கைரேகை நிபுணர் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

பின்னர் உடலை கைப்பற்றிய கொள்ளிடம் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை தொழில் போட்டி காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!