Skip to content
Home » வைரமுத்து பாடல்…39 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய சித்ரா

வைரமுத்து பாடல்…39 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய சித்ரா

தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். அதில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில் பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடி உள்ளார். இந்த பாடல் பதிவு சென்னையில் நடந்தது. இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, “39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை பாடல் பதிவில் சந்தித்தேன்.

அதே குரல். அதே கனிவு, அதே பணிவு” என்று குறிப்பிட்டு உள்ளார். தங்கர் பச்சான் கூறும்போது, “நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார். அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம். தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது” என்றார். இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!