Skip to content
Home » முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

தமிழக காவல்துறையின் உயரிய பதவியான டிஜிபி பதவியில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தமிழக அரசால நியமிக்கப்பட்டார். இந்தநிலையில்  நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட பின் நிருபர்களை சந்தித்த அவர்… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின்  முகாம்

அலுவலகத்தில் இன்று டிஜிபி சங்கர் ஜிவால்  சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இதனை தொடர்ந்து சென்னை கமிஷனர் சந்திப் ராய் ரத்தூர், ஏடிஜிபி தலைமையகம் டேவிட்சன் தேவாசீர்வாதம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!