Skip to content
Home » சேலம் மார்க்கெட், வீதிகளில் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்பு

சேலம் மார்க்கெட், வீதிகளில் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்பு

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை பிரசார ஆட்டோ பறிமுதல் முன்னதாக தர்மபுரியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சேலத்தில்  தங்கினார்.

இன்று  காலை  முதல்வர் ஸ்டாலின் சேலம் அக்ரஹாரம், கடைவீதி  பகுதியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார்.   மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள வியாபாரிகள்,  பொதுமக்களை சந்தித்து பேசினார். முதல்வருடன் வேட்பாளர் செல்வகணபதி,  ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும்  உடன் சென்றனர். அப்போது ஒரு பெண் முதல்வரிடம் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் அது தொடர்பாக ராஜேந்திரன் எம்.எல்.ஏவிடம்  ஏதோ கூறினார். பின்னர் அங்குள்ள ஒரு தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார்.  சேலம் கடைவீதி, அக்ரகாரம் பகுதியிலும்,மார்க்கெட்டிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வியாபாரிகள் ஓடிவந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!