‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லி செல்கிறார். டில்லியில் ஜனாதிபதி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை ஞாயிற்றுக்கிழமை(10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.