Skip to content
Home » நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவர் கைது…

நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவர் கைது…

  • by Senthil

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அதே உள்ள பிரபல மத்திய அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு திருவான்மியூர் சிவகாமிபுரம் முதல் தெரு வழியாக வழியாக நடந்து வந்துள்ளார்.  அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த வந்த அடையாளம் தெரியாத  நபர்  ஒருவர் மாணவியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து டூவீலரில் இருந்து தப்பினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார். அவரது பெற்றோர், திருவான்மியூர்  போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராவின் பதிவு காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சிசிடிவியில் பதிவான டூவீலர் எண்ணை வைத்து அவரது முகவரியைக் கண்டு பிடித்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். மேலும்  அந்த நபரை போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற ஜோஸ்வா (43) என்பதும் இவர் நீலாங்கரையில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து சீனிவாசனிடம் இருந்து  டூவீலரை பறிமுதல் செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!