சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் பதிவுகள் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைச் சீரழித்து பணமோசடி செய்வதாக நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா, ஹனி சென்னை, சூர்யபிரபா, உள்ளிட்டோர் மீது சேலம் ஆணையரிடம் வழக்கறிஞர் அஜித் சாக்கோ என்பவர் புகார் அளித்துள்ளார். சப்ஸ்கிரிப்ஷன், பிரைவேட் சாட் பெயரில் ஆபாச உரையாடல், அந்தரங்க வீடியோவை காட்டி பணம் பறிப்பதாகவும், இவர்களின் வங்கி கணக்குகள், சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார்.
