தொடர் விபத்து ஏற்படுவதை தவிர்க்க சுரங்கப்பாதை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்க்கார்பாளையம் பொதுமக்கள் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லணை சாலை இணையக்கூடிய பகுதியில் சாலையை கடந்து செல்ல கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே அப்பகுதியில் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (24). இவர் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இந்நிலையில் வேலை முடித்து வீடு திரும்பும் போது சஞ்சீவி நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை டூவீலரில் கடக்க முயன்ற போது, சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் விக்னேஷ் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமா போலீசார் கண்டுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே தங்களது கோரிக்கைகளை அரசு பணத்தில் கொள்ளாமல் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உறவினர்கள் விக்னேஷின் சடலத்தை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் போராட்டம் முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தெரிவித்தனர். ஒரு மணி நேரமாக போராட்டம் நீடித்தது. ஆனால் போராட்டத்தை போலீசார் கண்டுக்கொள்ளவில்லை. இருதரப்பிலும் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமாக வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர் வாகன ஓட்டிகள் . இதனை தொடர்ந்து ஆர்டிஓ பார்த்திபன், தாசில்தார் லோகநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.