Skip to content
Home » தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, மார்ச் 15-ந்தேதியன்று 3,264 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பின்பற்ற வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!