Skip to content
Home » பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சலிங் வரும் 22ம் தேதி தொடக்கம்… அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சலிங் வரும் 22ம் தேதி தொடக்கம்… அமைச்சர் பொன்முடி

  • by Senthil

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.  அதன்விவரம் வருமாறு:

• 2023-2024 ஆண்டிற்க்காண தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி முதல் தொடங்குகிறது. • ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும்

• ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

• ஜூலை 28ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை பொது கலந்தாய்வு நடைபெறும் • ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ம் தேதி வரை 2-ம் சுற்று கலந்தாய்வு நடைபெறும்.

ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி வரை 3-ம் சுற்று கலந்தாய்வு நடைபெறும். அதன்பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் பொறியியல் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 15- தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு முடிக்கப்படும். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் 430 பொறியியல் கல்லூரிகளில் 1.57 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3,100 பொறியியல் இடங்கள் கூடுதலாக உள்ளன.  பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர். காலியிடங்கள் இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். (ECE Advanced Technology, ECE Design and Technology) ஆகிய 2 புதிய படிப்புகள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டு வேறு படிப்புக்கு கல்லூரி மாறினால் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும். வரும் 21-ம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக பாடத்திட்டம் தொடர்பாக துணைவேந்தர்களுடன் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!