Skip to content
Home » செய்வினை வைத்திருப்பதாக ரூ. 12 லட்சம் மோசடி… 3 பேரை கைது செய்த சைபர் க்ரைம்…

செய்வினை வைத்திருப்பதாக ரூ. 12 லட்சம் மோசடி… 3 பேரை கைது செய்த சைபர் க்ரைம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது என மொபைலுக்கு வந்த அழைப்பை நம்பி 12 லட்சம் இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேசனில் 04.04.2022 அன்று அளித்த புகாரின் பேரில், அரியலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, துரிதமாக விசாரணை செய்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அரியலூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வாணி அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அளித்ததன் அடிப்படையில், அனைத்தையும் கேட்டறிந்த அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் அறிவு A1 வல்லவராஜ் (26) என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000/- அபராதம் விதித்தும், A3 குமார் என்பவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார். A2 கிருஷ்ணன் என்கிற தர்மராஜ் தலைமறைவாக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!