Skip to content
Home » இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

இந்திய வம்சாவளி ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக இருக்கிறார். அவர் நேற்று இந்திய பாரம்பரிய முறைப்படி லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடினார். வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. நெருங்கிய நண்பர்கள்  விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.   தீபாவளி ப்பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு  தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரது மனைவி கியாகோ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விருந்து நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!