Skip to content
Home » ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

ஐபிஎல் டெல்லி அணி வீரர்களின் பேட் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவர்களது உடைமைகளில் இருந்து , அவர்களது பேட்கள் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டில்லி அணியின் டேவிட் வார்னர் ,பிலிப் சால்ட் , மிட்சேல் மார்ஷ் , யாஷ் துல் உள்ளிட்ட வீரர்களின் 16 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் மாயமாகியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக எவ்வாறு காவல்துறையின் உதவியைப் பெறுவது என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியிடம் டில்லி தோல்வி அடைந்தது. ;மேலும் அடுத்த போட்டியில் நாளை கொல்கத்தா அணியை டில்லி எதிர்கொள்கிறது .

5 போட்டியிலும் தோல்வி அடைந்த உங்களுக்கு எதற்கு இந்த கிரிக்கெட் உபகரணங்கள் என்ற கோபத்தில் ரசிர்கள் யாரும் அதனை எடுத்து சென்று விட்டார்களோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!