நிதிநிலையைப் பொறுத்து படிப்படியாக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். பேரவையில் இன்று பட்ஜெட் உரை குறித்து விளக்கம் அளித்த அவர், முந்தைய அரசின் ஒப்பந்த முறைகேடுகளை ஆராயத் தொடங்கியுள்ளோம். கடந்த அரசின் திட்டங்களை நகல் எடுக்கவில்லை, மேம்படுத்தியுள்ளோம். 28 மாதங்கள் கழித்துதான் திமுக மகளிர் உரிமைத் தொகை கொடுத்தது என்று தெரிவித்தார்.
