Skip to content
Home » டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

டில்லி…….காய்கறி மார்க்கெட்டில் ராகுல் திடீர் விசிட்

  • by Senthil

ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாத் 29-ந் தேதி டில்லி ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்க பேசிய காய்கறி வியாபாரி ஒருவரின் வீடியோவை பகிர்ந்தார்.  அதில் ராமேஷ்வர் என்ற காய்கறி வியாபாரி, “தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்னால் தக்காளி வாங்கி விற்பனை செய்ய இயலவில்லை. அப்படியே வாங்கினாலும் அதை என்ன விலையில் விற்பது என்பதும் தெரியவில்லை. சிலர் தக்காளிகளை இருப்பு வைத்துள்ளனர். மழையில் அது அழுகிப்போக வாய்ப்பு உள்ளது. அதனாலும் நஷ்டம் ஏற்படும். பணவீக்கம் உயர்வால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒருநாளைக்கு ரூ.200 சம்பாதிப்பதே கடினமாக இருக்கிறது” என்று பேசியது பதிவாகி இருந்தது.   தொடர்ந்து ராகுல் காந்தி டில்லியில் உள்ள ஆசாத்பூர் சந்தைக்கு நேரில் சென்றார்.  அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பின்னர் காய்கறி  விலைவாசி நிலவரம் குறித்து தெரிந்து கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!