தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சங்கர் ஜிவால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனாவை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் கவர்னரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.