கோவையில் பைக்கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில், சென்னையை சேர்ந்த 24 வயது இளைஞர் நவீன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் எம்.பி.ஏ. படித்த நவீன், நண்பர்களை சந்திக்க வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக ஏற்பட்ட மோதல், பின்னர் இரு தரப்பினர் இடையே தகராறாக மாறியுள்ளது. இதில் ஒரு கும்பல் நவீனை கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
