Skip to content
Home » திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு பட்டாசு வெடித்து மக்கள் உற்சாக வரவேற்பு

திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு பட்டாசு வெடித்து மக்கள் உற்சாக வரவேற்பு

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் . 20க்கும் மேற்பட்ட கிராமங்களில்  அவர்   வீதிவீதியாக  சென்று  ஆதரவு திரட்டினார். வேட்பாளருக்கு  பெண்கள்  ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு  உதயசூரியனுக்கே வாக்களிப்போம் என்று உறுதி அளித்தனர்.

வேட்பாளர் அருண் நேருவுடன் மண்ணச்சநல்லூர் எம் எல் ஏ கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், செந்தில் குமார் உள்ளிட்ட திமுக மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

முசிறி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். கிராமங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் திமுக வேட்பாளரை வரவேற்றனர்.  வேட்பாளர் அருண்நேருவுடன் திருச்சி  வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன் ,செந்தில் குமார், தங்கவேல், அண்ணாதுரை ,மதிமுக சேரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  திரளாக சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!