திமுக தலைவரும் முதல்வர் ஸ்டாலினும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர். அப்போது 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சட்சியின் சார்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரப் பணிகள்
மேற்கொள்வதாகவும், வரும் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி
மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கமல் கூறியதாவது… மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் இந்த கூட்டணிக்கு எல்லா ஒத்துழைப்பையும் அளிப்போம் . இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கே கைகுலுக்க வேண்டுமோ அங்கு கைகுலுக்கியுள்ளேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.