Skip to content
Home » கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

  • by Senthil

திருச்சி, திருவானைக்கோவில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியதாவது… நான் தன் நிலத்தில் 20 வருடமாக செங்கல் காளவாய் நடத்தி வருகிறேன்.  எனக்கு சொந்தமான நிலம் மற்றும் செங்கல் காளவாயை அபரிக்க வேண்டும் என்று சீனிவாசன், விமல்குமார், விக்னேஸ்குமார், காசிராணி, சுரேஸ், லஞ்மி, கண்ணன், மாலதி, முத்துவேல், செல்வராஜ், மலர் ஆகியோர்  கடந்த மாதம் 5.11.2023 அன்று ஸ்ரீரங்கம் 6வது வார்டு திமுக செயலாளர் ஜனா என்பவரின் துணையுடன் 20க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து என் இடத்தில் வேலி போட குழி பறித்தனர். அவர்களை தடுக்க முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கடப்பாறையால் குத்தி உன்னை கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர்.  உயிருக்கு பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன். ரத்தம் அதிகம் போனதால் என் மைத்துனர் ஸ்ரீதரன் துணையுன் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்ந்தேன். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை  போலிசார் எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. அரிவாள், கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் நுழைந்து என்னை தாக்கியும், என் நிலத்தில் சட்டவிரோதமாக நுழைந்து வேலி போட முயன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!