Skip to content
Home » துறையூாில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்… பெரம்பலூர் திமுக வேட்பாளர் உறுதி..

துறையூாில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்… பெரம்பலூர் திமுக வேட்பாளர் உறுதி..

  • by Senthil

பெரம்பலூர் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் கே.என். அருண்நேரு, இன்று பகல் 12.12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம் வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், தொட்டியம் தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேரு நிருபர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏரி தூர்வாரி வாய்க்கால் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.  துறையூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!