Skip to content
Home » நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை நாய் துரத்தியதால் சாலையில் குறுக்கே ஓடிய சிறுமியை காப்பாற்ற அரசு பேருந்தை சாலையின் ஓரமாக ஓட்டுனர் தங்கதுரை திருப்பியுள்ளார். இதில் சாலை ஓரமாக இருந்த தடுப்புச் சுவற்றில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஓட்டுநர் சீட்டில் இருந்து பேருந்து உள்ளேயே கீழே விழுந்துள்ளார். இதையடுத்து பேருந்து. அருகில் இருந்த மாடி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது அரசு பேருந்து.
இந்த விபத்தில் ஓட்டுநர் திறமையாக செயல்பட்டதால் அதிஷ்டவசமாக சாலையில் குறுக்கே வந்த சிறுமியும் பயணிகள் உட்பட அனைவரும் உயிர்த்தப்பினர். சிறுமியையும், பயணிகளையும் காப்பாற்றிய டிரைவரின் திறமையை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!