Skip to content
Home » டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

  • by Senthil

நெகிழ்வுத்தன்மை அடிப்படையில்  கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமமும், நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!