Skip to content
Home » போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

திருப்பூர் கலைஞர் நகர் பகுதிைய  சேர்ந்தவர் மகேஷ்வரி . கூமார் 30 வயது இருக்கும். கணவர் இறந்து விட்டதால் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். திருப்பூரிலிருந்து  நேற்று பொள்ளாச்சி வந்த மகேஷ்வரி  அளவுக்கு அதிகமாக  மது குடித்துள்ளார்.  போதை தலைக்கு ஏறியதும் என்ன செய்வது என தெரியாமல் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே  நடு ரோட்டில் நின்று கொண்டு  போக்குவரத்து போலீஸ்காரர் போல  வாகனங்கள் செல்வதற்கு சிக்னல் கொடுத்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த போலீசார் யாருடா இந்த பெண், போலீஸ் டூட்டிய பார்க்கிறா என அருகே சென்று விசாரித்தனர். அப்போது தான் தெரிந்தது மகேஷ்வரி  புல் போதையில் இருப்பது. எனவே அவரை எச்சரித்து  வீட்டுக்கு போகும்படி கூறினர். அதற்கு மகேஷ்வரி நடு ரோட்டில் படுத்துக்கொண்டார். அவரை அப்புறப்படுத்த எந்த பெண்ணும் வரவில்லை. எனவே பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் அங்கு  பொதுமக்கள் கூடி விட்டனர்.

பொதுமக்கள் உதவியுடன்  மகேஷ்வரியை அப்புறப்படுத்தினர். அப்போது அவர் நடுரோட்டில் நடனமாடத் தொடங்கி விட்டார். ஒருவழியாக அவரை அங்கிருந்து அனுப்பிவிடலாம் என நினைத்தனர். ஆனால் அவர் போவதாக இல்லை. எனவே போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

 

குடிபோதையில் இளம் பெண் ஒருவர் போக்குவரத்தை சரி செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!