Skip to content
Home » சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு

சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் இரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு 3-வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு நேற்று  உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட உத்தரவில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதேபோல், உச்ச நீதிமன்றத்திற்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன், ஐஸ்வர்யா பதி ஆகியோருக்கும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!