Skip to content
Home » துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடக்கிறது. சேத விவரம்  சில மணி நேரங்களில் தெரியவரும் என மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!