சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின மற்றும் சில சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதில், 13 பேர் காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
